Saturday, January 16, 2021

நாகர்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் - NAGERCOIL FILTER HOUSE


NAGERCOIL FILTER HOUSE


நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது முக்கடல் அணை யாகும். இந்த அணையானது இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் 1945 ம் ஆண்டு திருவாங்கூர் மன்னர் சித்திரை திருநாள்  பாலராம வர்மா அவர்களின் உத்தரவின் படி வம்பாறு ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்டதாகும் இது சம்பந்தமான விவரங்கள் இந்த இணைப்பில் உள்ளது.

இணைப்பு :

https://thambivinoth.blogspot.com/2020/09/blog-post.html 


#முக்கடல் அணையில் இருந்து கிடைக்கப்பெறும் தண்ணீரானது நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமையப்பெற்றுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.



குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமையபெற்ற குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆனது ,முக்கடல் அணை யில் இருந்து பெறப்படும் நீரை நாகர்கோவில் நகர மக்களுக்கு சுத்திகரித்து வழ்ங்கும்வண்ணம் ஜூன் 20 1945 திருவாங்கூர் மன்னர்அவர்களால் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் தினம்தோறும் 200 லட்சம் லிட்டர் தண்ணீர்  சுத்திகரிக்கப்பட்டு நாகர்கோவில் மாநகர மக்களுக்கு வழ்ங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது , தினம்தோறும் 7-8 வார்டு பகுதிகள் என்ற அளவில் ஒவ்வொரு பகுதிக்கும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.



1945ஆம் ஆண்டு இது கட்டப்பட்ட பொழுது அன்றைய நாகர்கோவில் நகராட்சி மக்கள்தொகை கணக்கின்படி அவர்களின் தேவைக்கேற்ப , தினசரி (7MILLIONLITRE) 70லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கும் அளவில் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து 1961 ஆம் ஆண்டு நாகர்கோவில் நகராட்சியில் இணைக்கப்பட பகுதிகளுக்கும் இங்கு இருந்து குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கட்டது.




இரண்டாவது நிலையம்



 1961 ஆம் ஆண்டு நாகர்கோவில் நகராட்சியில் இணைக்கப்பட பகுதிகளுக்கும் இங்கு இருந்து குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கட்டதை தொடர்ந்து தினம்தோறும் மக்களுக்கு தேவைப்படும் நீரின் அளவு அதிகரிக்க தொடங்கியது , இதை கருந்தில்கொண்டு 1979 ஆம் ஜூலை 7 தியதி நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் அன்றைய தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களால் நாகர்கோவில் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு விநியோகம் திட்டதின்படி சுத்திகரிப்பு நிலைய இரண்டாவது STATION திறக்கப்பட்டது.

இரண்டாவது நிலையதின் மூலமாக தினமும் (8.5
MILLIONLITRE) 85 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து வழ்ஙகப்படுகிறது.

இதன்பின்னர் 2001 ஆம் ஆண்டு அன்றைய தமிழக அரசு (17MILLIONLITRE) 170 லட்சம் லிட்டர் அளவில் மூன்றாவது சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. மேற்கூறிய மூன்று சுத்திகரிப்பு நிலையம் மூலமாக தினம்தோறும் 200 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு நாகர்கோவில் மாநகர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டம்


நாகர்கோவில் மாநகரில் தற்பொழுது  புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்ப்படுகிறது.இதில் இருந்து கிடைக்கும் நீரையும் கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையதிற்க்கு கொண்டுவர்ப்பட்டு விநியோக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .அதன் படி அங்கு தற்பொழுது அங்கு 41.12 MILLIONLITRE 410 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படும்.

 கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையதின் செயல்பாடுகளை பார்க்கும் வண்ணம் பள்ளி, கல்லூரி மாணவ , மாணவிகள் (INDUSTRIAL VISIT) அனுமதிக்கபடுகிறார்கள். உரிய முன் அனுமதி பெற்று  பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மாநகராட்சி அலுவர்கள் நிலையதின் செயல்பாடுகளை விளக்கி கூறுவர். மேலும் இங்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

 




சுத்திகரிக்கும் முறை :

கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையதிர்க்கு முக்கடல் அணை மற்றும் கோடை காலங்களில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு வருகிறது, இந்த நீரை கீழ் காணும் வழிமுறைகளில் சுத்திகரிக்கப்படுகிறது.

1.     Aeration

2.     Plaint sedimentation 

3.     Coagulation  with sedimentation

4.     Filteration by rapad sand method

5.     Disinfection 

 

AERATION


இந்த முறையில் தூய காற்று நீருள் உட்புகும் வகையில் ஓடவிடப்படும் , இதன்மூலம் நீரில் உள்ள அதிக்கப்படியான இரும்புசத்து (IRON) , CO2 குறைக்கப்பட்டு நீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவும் 5-10mg அளவு உறுதிப்படுதப்படும்.இதனால் நீரில் உள்ள துர்நாற்றம் போக்கப்படும்.


PLAINT SEDIMENTATION


இந்த முறையில் aeration செய்யப்பட்ட நீர்ஆனது தொடர்ந்து குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஒரு இடத்தில் வைக்கப்படும், இதில் நீரில் உள்ள அழுக்குகள் கீழ் இறங்கும், இதனால் நீரில் உள்ள கலங்கள் தன்மை மாறும்


COAGULATION WITH SEDIMENTATION


இதில் ALUM CHEMICAL நீரில் கலக்கப்பட்டு 4 மணி நேரம் ஓர் இடத்தில் வைக்கப்படும் இதன்மூலம் குடிநீரானது 70% சுத்தம் செய்யப்படும் , இதனை தொடர்ந்து FILTERATION BY RAPID SAND METHOD  மூலம் மேலும் சுத்தம் செய்யப்பட்டு 80% சுத்தமாகும்.


DISINFECTION


இதில் SODIUM HYPO CHLORIDE மூலம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு ,மக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் சிறந்த குடிநீராக வருகிறது.இந்த நீரை தேக்கிவைக்கும் வண்ணம் நாகர்கோவில் மாநகர் முழுவதும் 12 இடங்களில் மேல்நிலைநீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு ,அங்கு இருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.



Friday, September 4, 2020

முக்கடல் அணை - MUKKADAL DAM

கன்னியாகுமரி மாவட்டதின் தலைநகராம் நாகர்கோவில் மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது முக்கடல் அணை ஆகும்.

முக்கடல் அணை


இந்திய சுதந்திரதிற்க்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் சில காலம் திருவிதாங்கூர் சமஸ்தானம் கீழ் இருந்தது
1919 ஆம் ஆண்டு நாகர்கோவில் நகராட்சியாக அறிவிக்கபட்டது. அன்றைய காலகட்டதில் நாகர்கோவில் நகரில் தொடர்ந்து பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை இருந்து வந்தது , அப்பொழுது மக்கள் நாகர்கோவில் நகரில் இருந்த பல குளங்களை பயன்படுத்தி தங்களின் நீர் தேவையை பூர்த்திசெய்தனர் . கால மாற்றத்தில் போதிய பாராமரிப்பு இல்லாமல் குளங்கள் அழிந்து போக குடிநீர் பிரச்சனை தலைவிரிக்க ஆரம்பித்தது .
ஆகையால் மக்களின் கோரிக்கையை அடுத்து வம்பாறு ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திரு நாள்பாலராம வர்மா அவர்களால் உத்தரவிடப்பட்டு 1945 ஆண்டு முக்கடல் அணை கட்டப்பட்டது.


முக்கடல் அணையின் கட்டுமானம் முழுவதும் களிமண் மற்றும் கிரானைட் கொண்டு கட்டப்பட்டது.


முக்கடல் அணையானது மூன்று பக்கம் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு இயற்கை எழில் நிரந்தப்பகுதி ஆகும்..

முக்கடல் அணை 25 அடி ஆழம் கொண்டது , மேலும் மற்ற அணைகளில் இல்லாத வகையில் -19.5 அடி ஆழம் நீரை சேமிக்கமுடியும். மைனஸ் இல் நீர் இருக்கும் பொழுது அதை மோட்டார் மூலம் பம்ப் செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
1945ஆம் ஆண்டு முக்கடல் அணை கட்டுமானதிற்க்கு இடம் தேர்வு செய்யும் பொழுது அப்பகுதி மக்கள் அணை கட்டுமானம் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்..
திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பாலராம வர்மா அவர்கள் மக்களின் எதிர்ப்பை சமாளித்து அப்பகுதியில் அணை கட்ட உத்தரவிட்டு பணிகள் நிடைபெற்றது.
இந்த அணை நீர் பிடிப்பு பகுதியில் பழங்கால கல்மண்டபம் ஒன்று உள்ளது கோடைகாலத்தில் அணையில் நீர் இல்லாத பொழுது இதனை காணமுடியும்.

அணையின்விபரம்

அணை உயரம் : 44.5 அடி
நீர்பிடிப்பு பகுதி : 17.48 ச.கி.
நீர்மட்ட பரப்பு : 126.9 ஏக்கர்
மிகை மடை நீளம்:130 அடி
கீழ் அகலம் : 314 அடி
மேல் அகலம் : 20 அடி
நீளம் : 1015 அடி



சில வருடம் முன்பு வரை போதிய பாராமரிப்பு இன்றி இருந்த இப்பகுதி தற்பொழுது மாநகராட்சியின் நடவடிக்கையால்
அங்கு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு சிறந்த சுற்றுலா தளம் ஆக உள்ளது . மேலும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலா வருவதற்க்கு எதுவாக அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.



கன்னியாகுமாரி மாவட்ட சுற்றுலாதளங்களில் முக்கிய இடம் முக்கடல் அணைக்கு உண்டு . ஒருமுறையேனும் குடும்பதுடன் கண்டு ரசியுங்கள். பொதுமக்களின் தேவைக்காக கழிவறை வசதிகள் ஏற்படுதப்பட்டுள்ளது. மேலும் நிகழ்வுகள் நடத்துவதற்க்கு சமுதாய நலக்கூடம் உள்ளது.


 

Tuesday, August 11, 2020

நாகர்கோவிலின் அடையாளம் - மணிமேடை / NAGERCOIL TOWER CLOCK

நாகர்கோவிலின் அடையாளம் - மணிமேடை


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் முக்கியஅடையாளமாக இருப்பது மணிமேடை மணிக்கூண்டு ஆகும்.


மணிகூண்டு இருபதாலயே  இப்பகுதிக்கு இப்பெயர் வரப்பெற்றது. இம்மணிக்கூண்டு 1893 ம் ஆண்டு பிப் . 15 தியதி திருவாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அந்த காலத்தில் இந்த மணிக்கூண்டில் இருந்து வரும் ஓசை2 கிலோமீட்டர் அப்பாலும் கேட்டதாக ஒருசெவிவழி செய்திஉண்டு.இம்மணிக்கூண்டுயில் உள்ள கடிகாரம் ஆனது எடை தாங்கிய 60அடி நீள சங்கலியால் இணைக்கப்பட்டு கம்பி மூலம்  புவிஈர்ப்புவிசையை அடிபடையாக வைத்து இயங்ககூடியது.

இன்று நாம் சுற்றுலா செல்வது போல அந்தக்காலத்தில் இந்த மணிக்கூண்டை காண்பதற்காக பூதப்பாண்டி , மார்தாண்டம் , கன்னியாகுமரி..... என்று மாவட்டதில் பலபகுதிகளிலும் இருந்தும் மக்கள் வந்து பார்த்துசெல்வார்கள் . இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் முதன்முதலாக பேருந்து சேவை துவங்கும் பொழுது மணிமேடை அருகில் உள்ள வேப்பமூடு பகுதியில் பேருந்துநிலையம் ஏற்படுத்தப்பட்டது.

1893ஆம் ஆண்டு ஆகஸ்டு 22ம் தியதி வெளியான திருவிதாங்கூர் அரசு குறிப்பேட்டில்  உள்ள தகவலின் படி, லண்டன் திருசபை சேர்ந்த் வெளிநாட்டை மறை .திரு டதி , ஹூவெர்ப் , ஹோர்ஸ்லி ஆகிய3 பேரும் நாகர்கோவிலை சேர்ந்த கிருஷ்ணன்அய்யர் , ரத்தினசாமி அய்யர் , ஆகியோர் இணைந்து இம்மணிமேடையை கட்டினார்கள்.அதன் கட்டுமான பணிகள் 1892 ஜூலை மாதம் துவங்கி ஆகஸ்டில் நிறைவு பெற்றது. மணிமேடையை கட்டுவதற்க்கு அன்றைய காலத்தில் 3258 ரூபாய் 9 சக்கரம் 12 காசு செலவானதாகவும். மணிமேடையை 1893 ஆண்டு பிப். 15 தியதி ஸ்ரீ மூலம் திருநாள் அவர்களால்திறந்துவைக்கப்பட்டது.. இவ்வாறு குறிப்பேட்டில் உள்ளது..



மேலும் மணிக்கூண்டை கட்டுவதற்கு ரூபாய் 1017. மட்டும் மன்னர் சார்பில் வழங்கப்பட்டது ,மீதி தொகை பொதுமக்களிடம் இருந்து பிரிக்கப்பட்டது ஆகும்.

மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் லண்டன் திருசபை சார்பில் மன்னர் .ஸ்ரீ மூலம். திருநாள் அவர்கள் மன்னராக பதியேற்றதற்காக வழங்கப்பட்டதாகும்.மேலும் கடிகாரத்தை அரண்மணை நுழைவாயிலில் வைக்க முடிவு செய்யப்பட்ட பொழுது லண்டன் திருசபை சார்பில் தற்பொழுது பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி அருகில் உள்ள கற்கோவிலில் இருந்து பார்த்தால் தெரியும் தூரத்தில் மணிக்கூண்டு அமைத்து நிறுவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் , இந்த இடத்தில் வைத்ததாக செவி வழி செய்தியும் உண்டு/.

தற்பொழுது இதை சரி செய்ய தெரிந்த தொழிலில்நுட்பம் தெரிந்தவர்கள் இல்லை என்ற காரணத்தினால் அதன் மணி ஓசை அதிகமாக கேட்க வில்லை , இருபினும் என்ன நூற்றாண்டு கடந்தும் கம்பீரமாக இருக்கும் அது நம் நகரின் அடையாளம் மாறி உள்ளது.


இம்மணிக்கூண்டு நம் நகரின் அடையாளமாக இருக்கின்றதால் , 1972 திரு. எம்.ஜி.ராமசந்திரன் அவர்களால் , நம் மண்ணின் மைந்தன் திரு. கலைவாணர் .என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டது.

நாகர்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் - NAGERCOIL FILTER HOUSE

NAGERCOIL FILTER HOUSE நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது முக்கடல் அணை யாகும். இந்த அணையானது இந்திய சுதந்தி...